தமிழக திரைப்பட நடிகர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி பீமநகர் பகுதியில் சிவாஜி கணேசனின் திரு உருவப்படத்திற்கு திருச்சி மாவட்ட தலைமை சிவாஜி மன்றம் மற்றும் அகில இந்திய சிவாஜி மன்றம் சார்பில் திருச்சி மாவட்ட செயலாளர் ஆர் சி பிரபு தலைமையில் நடிகர் சிவாஜி ரசிகர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 இந்நிகழ்வில் அகில இந்திய சிவாஜி மன்ற துணைத் தலைவர் சீனிவாசன் திருச்சி மாவட்ட சிவாஜி மன்ற தலைவர் சண்முகம் திருச்சி மாவட்ட பொருளாளர் ராமன் துணை செயலாளர் ஜெயராமன் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் மதி சீனிவாசன் சிவாஜி நாகராஜ் சிவாஜி செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதனைத தொடர்ந்து மாவட்டச் செயலாளர் ஆர் சி பிரபு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் சென்னையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருஉருவ சிலையை இன்று திறந்து வைக்கிறார் அவருக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ரசிகர் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் அதேபோல் திருச்சி பிரபா ரவுண்டானாவில் கடந்த 11 ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவ சிலையை தமிழக முதல்வர் மாவட்ட கலெக்டர் அவர்களும் திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க கோரி திருச்சி மாவட்ட தலைமை சிவாஜி மன்றம் அகில இந்திய சிவாஜி மன்றம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *