திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த நான்கு மாதங்களாக தங்கம் கடத்தல் அதிகமாக நடந்துள்ளது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் கடத்தல் மும்மடங்கு அதிகரித்துள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 45- வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ 15 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பு ஆண்டு மார்ச் வரையிலான காலகட்டத்தில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருபத்தி எட்டு கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது இந்த வருடம் கடத்தல் அதிகரித்திருப்பதற்கு பேரிடர் காரணமாக இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் சுருங்கியதும் ஒரு காரணமென சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *