திருச்சி மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் மணச்சநல்லூர் அருகே உள்ள உளுந்தங்குடி கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது . இவ்விழாவில் மண்ணச்சநல்லூர் சேர்மன் ஸ்ரீதர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவை நடத்தி வைத்தார்.

அப்போது கர்ப்பிணிப் பெண்களுக்கு மாலை சூடி வளையல் அணிவித்து வளைகாப்பு நடத்தப்பட்டது. பின்னர் அறுசுவை உணவு கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது. வளைகாப்பு விழாவை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் அடங்கிய சீர்வரிசை பை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் K.B.A .செந்தில் கவுன்சிலர், வட்டார மருத்துவ அலுவலர் மதிவாணன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *