தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி, இந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, கூட்டணிக் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என பலர் தேர்தல் களத்தில் இறங்கி பொது மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அதன் படி திருச்சி மாநகரில் 34-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெ.சீனிவாசன் இன்று காலை துரைசாமிபுரம் முதல் தெரு, தனமணி காலனி மற்றும் ஹவுசிங் போர்டு ஆகிய பகுதிகளில் உள்ள வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட 34 வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜெ. சீனிவாசனுக்கு அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர் மேலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பேராதரவுடன் அப்பகுதி முழுவதும் உள்ள வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

உடன் அவைத்தலைவர் ரஹீம், இணை செயலாளர் ரஹ்மத், அம்மா பேரவை செயலாளர் ஹனிபா மற்றும் இன்ஜினியர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *