அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் செயற்குழு கூட்டம் தலைவர் டாக்டர் கே எஸ் சுப்பையா பாண்டியன் தலைமையில் திருச்சி தில்லைநகர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வெற்றி பெற பாடுபடுவது எனவும் 2 லட்சம் சித்தா ஆயுர்வேதா அக்குபஞ்சர் மருத்துவர் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சித்த மருத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து வரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் பழனியில் சித்த மருத்துவ கல்லூரி சென்னையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் துவங்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. விரைவில் சித்த மருத்துவ கல்லூரி திருச்சியில் துவங்கப்படும் என்று அறிவித்த நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே என் நேருவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் டாக்டர் கணேசன், டாக்டர் சரோஜா, டாக்டர் ஜான் ராஜ்குமார், டாக்டர் மகேஷ், டாக்டர் முனவர் டாக்டர் முகமது அலி, டாக்டர் சகுந்தலா கார்த்திக் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *