திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனையின் டீன் வனிதா ஓய்வு பெற்றதையடுத்து புதிய டீனாக பொறுப்பு ஏற்றுள்ள டாக்டர் நேரு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

திருச்சி அரசு தலைமை மருத்துவ மனையில் அதி நவீன கருவிகள் மூலம் சிறந்த மருத்துவர்களை கொண்டு அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கொரோனா நோய் தொற்றுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் அரசு மருத்துவமனையில் செய்யப் பட்டுள்ளது. மேலும் பணியில் சேர்ந்த பின்பு இந்த அரசு மருத்துவ மனையில் நெடுநாள் கனவாக புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை கருவியை தமிழக அரசின் துணையோடு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வேன். தற்போது திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் திரு நங்கைகளுக்கு என 10 படுக்கையுடன் கூடிய வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திருநங்கைகளுக்கு பொதுப் படையான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை செய்ய சிறந்த நரம்பியல் நிபுணர்கள் பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர். திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு செவிலியர்கள் பற்றாக்குறை குறித்து தமிழக மருத்துவ இயக்குனரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *