திருச்சி பீமநகர் பகுதியை சேர்ந்தவர் கௌதம் நாகராஜன் ஏற்கனவே இவர் பாஜகவில் திருச்சி பீமநகர் கிளை தலைவர், வார்டு தலைவர், இளைஞரணி மண்டலத் தலைவர், இளைஞர் அணி மாவட்ட செயலாளர், இளைஞர் அணி மாவட்ட தலைவர், மண்டல பொதுச் செயலாளர், மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

மேலும் திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும், சமூக பணிகளும், மக்கள் பணிகளும் ஆற்றி வருகிறார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநில பொதுச் செயலாளராக கௌதம் நாகராஜன் நியமிக்கப்பட்டதை அடுத்து பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா, முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்த தமிழக பாஜகவின் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் கௌதம் நாகராஜன் வாழ்த்து பெற்றார்.

அவருக்கு கட்சி நிர்வாகிகள் நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்