திருச்சி தென்னூர் வாமடம் பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு வீடு எரிந்து கருகியது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும் திருச்சி மேற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.என்.நேரு நேரில் சென்று பார்வையிட்டு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அரசின் சார்பில் தலா ரூபாய் ஐந்தாயிரம் மற்றும் தனது சொந்த நிதியில் தலா ரூபாய் 10 ஆயிரம் உதவித்தொகையும் நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், முன்னாள் துணை மேயர் அன்பழகன், திமுக பிரமுகர்கள் வைரமணி, காஜாமலை விஜி மற்றும் பலர் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்