தமிழ்நாடு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் 10வது மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவரும், நிறுவனருமான கே.கே செல்வகுமார் தலைமை தாங்கினார். இக் கூட்டத்திற்கு மாநில துணை தலைவர்கள் சம்பத், கணேசன் மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் தளவாய் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன் வரவேற்புரை ஆற்றினார்.

இந்த 10-வது மாநில செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்களாக:-

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய பரிந்துரைப்படி முத்துராஜா முத்தரையர் அம்பலக்காரர் (மாவட்டங்கள் நீங்கலாக) சேர்வை உட்பட முத்தரையர் சமூகத்தின் அனைத்து உட்பிரிவுகளையும் சீர்மரபினர் பட்டியலில் கொண்டுவந்து வகுப்புவாரி விகிதாச்சார இடப்பங்கீடாக 10% வழங்கிட வேண்டும். மேலும் வகுப்புவாரி விகிதாச்சார இடப்பங்கீடு வழங்கிட சாதிவாரி கணக்கெடுப்பு வீடு வீடாகச் சென்று நடத்திட மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும். திருச்சி ஒத்தக்கடை சிக்னலில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் திருவுருவ சிலையை வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் அகற்ற எத்தனிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் போக்குவரத்து நெரிசல் அற்ற பகுதியில் தேவையில்லாமல் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டுமென தமிழக அரசை  கேட்டு கொள்கிறோம். வாரியத்திற்கு எங்களது சமூகத்தைச் சேர்ந்த கல்வியாளர்களை வாரிய தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமித்து விரைந்து வாரியத்தை செயல்படுத்த தமிழக அரசை கேட்டு கொள்கிறது.

மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் செல்லும் மீனவர்கள் எதிர்பாராதவிதமாக விபத்துக்கு உள்ளாகும் போது உயிரிழந்த மீனவர்களுக்கு 10 லட்சமும், காயமடைந்த மீனவர்களுக்கு 5 லட்சமும் மாநில அரசு வழங்கிட முன்வர வேண்டும். 2019 திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அளித்த வாக்குறுதியின்படி மதுரை மாவட்டம் வலையங்குளம் சந்திப்பில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவ சிலையை நிறுவ வேண்டும். திருச்சி மாவட்டத்தில் அமையவிருக்கும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் மணிமண்டப கட்டுமான பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி முத்தரையர் சமூகத்தின் பாரம்பரியமும் பண்பாடும் ஆன பாரிவேட்டை அனுமதி வழங்கிட வேண்டும். முத்திரையர் சமூகத்தில் இதுவரையில் சாதி மோதலால் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர் மேலும் தொடர்ந்து தாக்குதலுக்கும் சாதி வன்கொடுமைக்கு உள்ளாகி வருகின்றனர் இவர்கள் ஜாதி சொல்லி இழிவுபடுத்தும் செயலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவே மத்திய அரசின் பாலகிருஷ்ணன் ரெங்கி 2008 கமிஷன் பரிந்துரையின்படி முத்தரையர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்து சட்ட பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வினால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது எனவே பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி கீழ் கொண்டுவர மாநில அரசு சம்மதிக்க வேண்டும் மேலும் சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 வருடங்களுக்கு மேல் சிறையில் வாடும் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் தகுதியை ஆராய்ந்து விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். தனித்தொகுதிகள் ஆக இருக்கும் கிருஷ்ணராயபுரம் நிலக்கோட்டை துறையூர் போன்ற சட்டமன்ற தொகுதிகளை பொது தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி திண்டுக்கல் புதுக்கோட்டை சென்னை புற வழிச் சாலைகளை இணைக்கும் திருச்சி அரைவட்ட சுற்றுச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக திருச்சி அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த 10-வது மாநில செயற்குழு கூட்டத்தில் மத்திய மண்டல பொறுப்பாளர் குணா, மாநில இளைஞரணி அமைப்பாளர் வைரவேல், மாநில செய்தி தொடர்பாளர் ராஜா மற்றும் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *