திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் பிறந்த சிலமணி நேரத்திலேயே தொப்புள் கொடி கூட அறுபடாமல் உயிருடன் குப்பையில் ஆண் குழந்தை உள்ளதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இரக்கமற்ற முறையில் பச்சிளம் குழந்தையை உயிரோடு குப்பை தொட்டியில் வீசி விட்டு சென்ற பெண் யார்? என்றும் அல்லது தகாத முறையில் பிறந்த குழந்தையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்த நிலையில் குப்பையில் தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்