மத்திய,மாநில அரசுகளின் பெட்ரோல்,டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருச்சி, சமயபுரம் மண்ணச்சநல்லூர் பகுதியில் மாநகர மாவட்ட செயலாளர் இரா. பிரபு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே திருட்டுத்தனமாக அணை கட்டிய கர்நாடக அரசை கண்டித்தும், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை கண்டித்தும், மத்திய மாநில அரசுகளின் வரி திணிப்பு காரணமாக பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னச்சாமி ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள்,விவசாய சங்க நிர்வாகிகள் என 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *