கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதை கண்டித்தும் ஆவணங்களின் அடிப்படையிலும் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்படாமல் ஒருதலைப் பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்தும், இனி ஒரு பள்ளிவாசலை இடிக்க அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி மாவட்டம் சார்பாக வழிபாட்டு உரிமைக்கான பாதுகாப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் திருச்சி மரக்கடை அருகே இன்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக கிழக்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமை தாங்கினார் மேற்கு மாவட்ட தலைவரும் கவுன்சிலருமான பைஸ் அகமது வரவேற்புரை ஆற்றினார். தமுமுக தலைமை பிரதிநிதி கோவை சாதிக் அலி, பேச்சாளர் நாஞ்சில் சம்பத்,

திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலாமா தலைவர் மௌலானா ரூஹீல் ஹக் தமுமுக மகளிர் பேரவை மாநில செயலாளர் ஷான் ராணி ஆலிமா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்