திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைத் தீர்க்கும் நாள் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பிரபு தலைமையில் பாலக்கரை ரவுண்டானாவில் அமைந்துள்ள சிவாஜிகணேசன் திருவுருவை சிலை திறக்க கோரி மனு அளித்தனர்.

 கடந்த 13 ஆண்டுகளாக நிறுவப்பட்டு மூடி வைக்கப்பட்டுள்ள சிவாஜிகணேசன் உருவச் சிலையை அவர் தமிழர் என்பதாலே சிலை திறக்கவில்லை என்பது போல் தோன்றுகிறது எவ்வித காரணமும் இன்றி இந்த சிலையை இதுவரை திறக்கப்படவில்லை சிவாஜி கணேசன் ரசிகர் மன்றங்கள் சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் பலமுறை சிலை திறப்பு குறித்து மனு கொடுக்கப்பட்டு அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை.

 ஆகவே எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தரும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *