திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் சார்பில் அதின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி அரியமங்கலத்தில் 16வது வார்டு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் அஞ்சுமனே ஹிமாயத்தோ இஸ்லாம் அறக்கட்டளைக்கு சொந்தமாக 5.45 ஏக்கர் நிலம் கடந்த 35 வருடங்களாக எந்தவித பயன்பாடு இன்றி கிடந்தது. தற்பொழுது அந்த நிலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் விதமாக அறக்கட்டளை நிர்வாகிகள் கூடி ஆலோசனைக்கு பின்னர் அந்த நிலத்தை நிலமற்ற ஏழை மக்களை கண்டறிந்து நபர் ஒருவருக்கு 540சதுர அடி என வாடகைக்கு பிரித்துக் கொடுத்து. அதன் மூலமாக வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளனர்.

ஆனால் இந்த அறக்கட்டளை தன்னிச்சையாக இடத்தை விற்பதாக கூறி தனிப்பட்ட நபர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரில் எந்த ஒரு உண்மையையும், முகாந்திரம் இல்லை எனவே மாவட்ட ஆட்சியர் இது தொடர்பான விசாரணையில் தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும். மேலும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நம் மனுவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *