திருச்சி ஜங்சனில் உள்ள ரயில்வே மண்டல பல்துறை அலுவலகத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளருடன் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,இதில் பேசிய அவர் :

இது காலம் கடந்த முடிவு – என்றாலும் வரவேற்கிறோம்,பாராட்டுகிறோம்,ஆனாலும் கூட எவ்வளவோ விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் போராட்டத்தை பிரதமர் புரிந்துகொள்வதற்கு ஒர் ஆண்டு ஆகிவிட்டது.உண்மையாக இதற்காக போராடி எத்தனையோ விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்,உயிர்ச் சேதங்கள்,பொருட் சேதங்கள் பெரிய அளவில் ஆனது.

உத்தரகாண்ட்,மணிப்பூர் உத்தரப்பிரதேசம்,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டுதான் பிரதமர் நரேந்திர மோடி இந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றுள்ளார் – இருந்தாலும்கூட இது விவசாயிகளின் வெற்றி.

எந்த ஒரு அரசியல் கட்சிகளும் இதற்கு உரிமை கொண்டாட முடியாது – முழுக்க முழுக்க விவசாயிகளின் உண்மையான போராட்டமே இதற்கு காரணம்.

நீட் விவகாரத்தை பொறுத்தவரை மற்ற மாநிலங்கள் குறிப்பாக வட மாநிலங்களில் பெரிய அளவில் முனைப்பு காட்டவில்லை – ஆனால் தமிழகம் தான் முழுவதுமாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது, எனவே சட்டரீதியாக எதிர்கொள்வோம் – திருமாவளவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *