தமிழ்நாட்டில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து மோசடியாக பத்திரப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் “சொத்து பதிவு செய்யும்போது, அந்த சொத்து நீர் நிலையில் இல்லை என்பதற்கான உறுதிமொழி பத்திரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. இதனை அமல் படுத்துவதற்கான உத்தரவை பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது, வருவாய் துறையின் “தமிழ் நிலம்” தகவல் தொகுப்பில் நீர் நிலை என்று காட்டப்பட்டுள்ள பகுதிகளில், சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிலங்களுக்கு மின்சார இணைப்பு, கட்டட அனுமதி வழங்கப்படாது. எனினும் அண்மையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி பதிவுக்காக வரக்கூடிய சொத்து, நீர் நிலை பகுதி இல்லை என்பதற்கான உறுதிமொழி ஆவணம் கட்டாயமான ஒன்றாகும்.

இதற்கான உறுதிமொழி ஆவணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான மாதிரி வெளியிடப்பட்டு இருக்கிறது. அதாவது இந்த ஆவணத்தை பிரதான பத்திரத்துடன் இணைத்து ஸ்கேன் செய்யவும். இந்த வழிமுறைகளை தவறாது சார் பதிவாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்