கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான ரூட் தல பிரச்சனையில் மாணவர்கள் தங்களின் கெத்தை காட்டுவதற்காக பஸ்சின் ஜன்னல் கம்பிகளை பிடித்துக் தொங்கிய படியும், பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி, பாட்டு பாடி, குத்தாட்டம் போட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மாநகரின் பஸ்களில் தொடர்ந்து படியில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது எப்ஐஆர் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. ஆபத்தை உணராமல் படிக்கட்டில் பயணம் செய்ய வேண்டாம் என மாணவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் நடத்துனர் அறிவுரை கூறினால் அவர்களுடன் மோதலில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர். இதை தடுக்கும் வகையில் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்களை முதல் முறை எச்சரித்தும் இரண்டாவது முறை அதே தவறை செய்தால் அந்த மாணவர்களை பிடித்து அவர்கள் மீது எஃப் ஐ ஆர் வழக்கு தொடரப்படும் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *