பிரபல போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ இவரது மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் இவர்களுக்கு சமீபத்தில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அதில் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கிறிஸ்டியானா ரொனால்டோ புதிதாக பிறந்த மகன் உயிரிழந்துள்ளதாக அவர் தன்னுடையை ட்விட்டர் பக்கத்தில் பெரும் சோகத்துடன் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘எங்களுடைய அன்பு மகன் இறந்துவிட்டான் என்பதை மிகவும் கனத்த இதயத்துடன் பதிவு செய்கிறோம். பெற்றோராக நாங்கள் மிகுந்த வேதனையுடன் உள்ளோம். என்னுடைய மகனை காப்பாற்ற போராடிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றி. எங்களுடைய பெண் குழந்தை பிறப்பு எங்களுக்கு தற்போது ஆறுதலாக உள்ளது. எப்போதும் எங்களுடைய மகனை நாங்கள் எப்போதும் விரும்புவோம்’ எனப் பதிவிட்டுள்ளார்.

ரொனால்டோவின் மகன் மறைவிற்கு அவருடைய கால்பந்து ரசிகர்கள் பலரும் தங்களுடைய சோகத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *