ஜனவரி 1 புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னையில் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் கூட்டமாக கூடுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பாதிப்பு குறைந்ததால் தமிழக அரசு தற்போது தளர்வுகளை அறிவித்தது, இதற்கிடையே ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு பரவி வரும் நிலையில் எச்சரிக்கையுடன் மக்கள் இருக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் அடிப்படையில் வரும் 31ம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்கள் ஒன்று கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பாக ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், அரங்குகள், கிளப்புகளில் வர்த்தகம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பண்ணை வீடுகளில் கேளிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்த கூடாது மேலும் மெரினா, எலியட்ஸ், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைப் பகுதியில் பொதுமக்கள் ஒன்று கூட வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *