காவல்துறை மற்றும் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் பொது இடங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக திருச்சி மாநகர காவல் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்காகவும் , ஒரு சமநிலை சமூகத்தை உருவாக்கவும் தகுதிவாய்ந்த நபர்களை கொண்டு , கே.கே.நகரில் உள்ள ஆயுதப்படை சமுதாய கூடத்தில் 18-ம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெறும் கருந்தரங்கத்தை காவல் கமிஷனர் கார்த்திகேயன் தொடங்கி வைத்து பேசுகையில். சமூகத்தில் ஆண்களுக்கு இணையாக பணியாற்றும் பெண்களுக்கு வாழ்த்துகளை முதற்கண் தெரிவித்து கொண்டும் ,

தமிழக காவல்துறையில் ஆண்கள் மட்டுமே பணிபுரிந்து வந்த நிலையில் , பெண்களும் ஆண்களுக்கு இணையாக காவல்துறையில் பணிபுரிந்து வருவதாகவும் , மேலும் நாட்டிலேயே தமிழக காவல்துறையில் பெண்கள் அதிக அளவில் பணியாற்றி வருவதாகவும் , குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண்கள் சிறப்பாக பணியாற்றி இந்தியாவிலேயே தமிழக காவல்துறை முன்னோடி மாநிலமாக திகழ்வதாகவும் , மேலும் பெண்களுக்கான வேலை வாய்ப்பில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளதாகவும் , பல சமூக கட்டமைப்புகையில் பெண்கள் பணிபுரிந்து வருவதாகவும் , காவல்துறையில் பணிபுரியும் பெண்கள் அனைவரும் பெண்கள் பாதுகாப்பு குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு ,

வேறு பணிகளில் உள்ள தங்கள் உறவினர்கள் மற்றும் தெரிந்த நபர்களுக்கு பாதுகாப்பு குறித்து தெரிவிக்கவேண்டும் எனவும் , பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய அரசு நிறுவனங்கள் மூலமாக இலவச உதவி எண்கள் : 1091 மற்றும் 181 மூலமாகவும் அன்றாட பாதுகாப்பினை உறுதி செய்துகொள்ளவேண்டும் என தெரிவித்தார் . மேலும் இந்த கருத்தரங்கினை எல்லோரும் பாதுகாப்பு குறித்து பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என கூறி உரையாற்றினார்” . மேலும் இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர் வடக்கு சரகம் , கூடுதல் காவல் துணை ஆணையர் மற்றும் 60 பெண்கள் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *