திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் , தனியார் பள்ளிகள் என சுமார் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்குகின்றன நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து மாணவர்கள் துறையூரில் உள்ள அண்ணா பேருந்து நிலையத்திற்கு வந்தார்கள். தினந்தோறும் பயணம் செய்யும் மாணவர்கள் உள்ளார்கள் அதில் ஒரு சிலர் மாணவர்கள் மட்டும் பேருந்தில் செல்லும்போது படிக்கட்டுகளில் நின்று கொண்டு நடந்து செல்பவர்களை எட்டி உதைப்பது மற்றும் இருசக்கர வாகனங்களை கீழே தள்ளுவது அருகில் செல்லும் வாகனங்களை தொடுவது உள்பட பல்வேறு தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் .

இந்நிலையில் நேற்று துறையூரில் இருந்து ஓமந்தூர் செல்லும் அரசு பேருந்தில் மாணவர்கள் வழக்கம்போல் பேருந்தின் பின்பக்க படிக்கட்டுகளில் ஐந்து மாணவர்கள் நின்று கொண்டு பயணம் செய்தார்கள் அப்போது பேருந்து துறையூரில் இருந்து ஓமாந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது துறையூர் பெரம்பலூர் சாலையில் பேருந்தும் லாரியும் ஒரே வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது அருகில் இருந்த லாரியை தொட்டுப் பிடித்தார்கள் இதை பார்த்த லாரி டிரைவர் உடனடியாக லாரியின் வேகத்தை குறைத்தார் அப்போது அரசு பேருந்தும் லாரியும் மிக அருகாமையில் சென்றதால் படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் பயணம் செய்த ஐந்து மாணவர்கள் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிர் இழக்கும் அபாய சூழ்நிலை இருந்தது லாரி டிரைவர் சூழ்நிலையை உணர்ந்து லாரியை மெதுவாக இயக்கியதால் அதிர்ஷ்டவசமாக ஐந்து மாணவர்கள் உயிர் த்ப்பினர் துறையூர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் ஏற்கனவே இதேபோன்று படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்த மாணவர்கள் துறையூரில் உள்ள அரசு மருத்துவமனை அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது அருகில் சைக்கிளில் சென்ற ஒருவரை எட்டி உதைத்து கீழே தள்ளினார்கள் அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோன்று தற்போது இந்த மாணவர்கள் தொடர்ந்து தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்களை சம்பந்தப்பட்ட பள்ளியை தொடர்பு கொண்டு கண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள் . மேலும் போக்குவரத்து போலீசார் சட்டம் ஒழுங்கு போலீசார் என ஏகப்பட்ட போலிசார் சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால் போக்குவரத்து போலீசார் இதை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கின்றனர் எனவே சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்ட நேரத்தில் போக்குவரத்து போலீசாரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு படியில் தொங்கும் மாணவர்களுக்கு அறிவுரை கூறி பேருந்து உள்ளே செல்ல அறிவுறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்