திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அக்கரைப்பட்டி பகுதியில் தென் சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது அந்த பகுதியில் இரவு நேரத்தில் தொடர்ந்து வழிப்பறி நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மூன்று இளைஞர்கள் அதே பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு அக்கரைப்பட்டி பகுதியில் உள்ள காட்டு பகுதியில் பதுங்கி இருந்தபோது திருடர்களை கண்ட கிராம மக்கள் விரட்டி பிடிக்க முயன்றனர். அதில் இருவர் தப்பித்த நிலையில் திருவானைக்காவல் வடக்கு 5ம் பிரகாரம் பகுதியை சேர்ந்த பரத்குமார் வயது 24 ஒருவரை மட்டும் பிடித்து அக்கரைப்பட்டி ஊர் பகுதியில் உள்ள கோவிலில் அடைத்து வைத்து காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவத்தை அறிந்த அருகிலுள்ள கிராம பொதுமக்களும் சம்பவ இடத்தில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குற்றவாளியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர் ஆனால் அப்பகுதியில் இருந்த மக்கள் ஒன்று திரண்டு அழைத்துச் செல்ல வழிவிடாமல் அந்த இளைஞனை அனைவரும் தாக்கியதால் காவல் துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது, மேலும் காவல்துறையின் வாகனத்தின் பின்புறம் கண்ணாடி உடைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *