அதிமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்ஜோதி செய்தியர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

அதிமுக ஆட்சியை கொண்டு வர ஒற்றை தலைமை மீண்டும் தேவை. மேலும் மாவட்ட செயலாளர்களில் 2 தவிர 75 மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒற்றை தலைமை வரவேண்டும் என கோரிக்கையை முன்வைத்து பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் கோரிக்கையை எழுப்பினர். நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடிக்கு ஆதரவு உள்ளதை தெளிவாக வெளியாக உள்ளது. ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்தை நிறுத்த தமிழக காவல்துறை தலைவர் பிஜேபி திருமண மண்டப உரிமையாளருக்கும் கடிதம் எழுதுவதன் மூலம் அதிமுகவை அழிக்க துடிக்கிறார். அவர் ஸ்டாலின், TTV, சசிகலாவை நம்பி அரசியல் செய்கிறார். ஓபிஎஸின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *