திருச்சி மாநகராட்சியில் 29 -வது வார்டு திமுக வேட்பாளர் கமால் ஆழ்வார்தோப்பு பகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் பொதுமக்களிடம் தமிழகத்தில் கடந்த 9 மாத காலமாக நடைபெற்று வரும் திமுக அரசின் சாதனைகள் ஆன பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம் குர்ஆன் இடத்தில் ரூபாய் 4000 நிவாரண உதவி மக்களை தேடி மருத்துவம் பொங்கல் பரிசு மற்றும் பல சாதனைகளை கூறி வாக்குகளை சேகரித்தார்.

மேலும்பொதுமக்கள் கூறும் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொண்டு வரும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் தொய்வில்லாமல் நம் பகுதியில் செயல்படுத்த உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *