திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சிக்கு அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்த காதர் மைதீன் இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இதன் அருகே விவசாய பாசனத்திற்கு 40 அடி ஆழமுள்ள கிணறும் உள்ளது .

இந்நிலையில் அந்த கிணற்றில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலையடுத்து துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் கிடந்த மலைப்பாம்பை உயிருடன் மீட்டு வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டுச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்