திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கொல்லான்குளம் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மனைவி ஜோதி இவர்களின் மகன் மணிகண்டன் வயது (23). இந்த பகுதியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இதேபோல் எடமலைப்பட்டிபுதூர் நல்லகேணி தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவரது மனைவி தனலட்சுமி இவர்களின் மகள் நித்யா வயது (19). இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ் சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன், நித்யா இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நித்யாவின் பெற்றோர்கள் அவருக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்து வந்த நிலையில் காதல் ஜோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர்.பின்னர் கரூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதையடுத்து போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் திடீரென நித்யாவின் தாய் தனலட்சுமி மணிகண்டன் கட்டிய தாலி தனது மகள் கழுத்தில் இருப்பதைக்கண்டு ஆத்திரமடைந்து நித்தியா கழுத்தில் அணிந்திருந்த தாலியை அறுத்து எறிந்தார். உடனே அங்கிருந்த பெண் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். போலீசார் மத்தியில் மணிகண்டன் தனது காதலியின் கழுத்தில் மீண்டும் தாலி கட்டினார். காதல் திருமணம் செய்த மகளின் தாலியை காவல் நிலையத்தின் உள்ளேயே தாய் அறுத்த எறிந்த சம்பவத்தால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *