இரு தரப்பினருக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இருத்தரப்பினரையும் கண்டோன்மென்ட் காவல்நிலையம் அழைத்து விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் இருத்தரப்பினரும் ஒருமித்தமாக சமாதானமாக செல்வதாகவும் வழக்கு எதுவும் தேவையில்லை என எழுத்துபூர்வமாக தெரிவித்துக்கொண்டனர்.

இதனடிப்படையில் திருச்சி மாநகர காவல் கமிஷனர் அருண் உத்தரவுபடி இருத்தரப்பினரும் ஆளுக்கொரு மரக்கன்று நட்டு வளர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டதன் பேரில் இருத்தரப்பினரும் ஆஜராகி மரக்கன்று நட்டனர். மழைக்காலம் வர இருப்பதால் மரக்கன்றுகள் நட்டு இயற்கைக்கு உதவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசாருக்கு திருச்சி மாநகர காவல் கமிஷனர் அருண் பாராட்டு தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *