புதிய கல்வி கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், துறைஅதிகாரிகளும் பங்கேற்கவில்லை.

இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கூட்டத்தை புறக்கணிக்கவில்லை நாங்கள் அனுப்பிய மின்னஞசலுக்கு பதில் வராததால் அதில் கலந்து கொள்ளவில்லைஅந்த அளவில்தான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும் கல்வியில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு அனுப்பிய சுற்றறிக்கையில் புதிய கல்விக் கொள்கை குறித்த மூன்று முக்கிய அம்சங்களை விவாதிக்க வேண்டும், கல்வியில் மாற்றம் ஆன்லைன் வகுப்புகள் குறித்த செயல்பாடுகள் மாநிலங்களில் கல்வி நிலை உள்ளிட்டவற்றை ஆலோசிக்க நேரில் வருமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி இருந்த அந்த சுற்றறிக்கையில் தற்போது புதிதாக பொறுப்பேற்ற அமைச்சருடைய பெயரை அதில் இணைக்காமல் மின்னஞ்சல் வந்ததால் பள்ளிக்கல்வித்துறை மத்திய அரசுக்கு மீண்டும் அமைச்சருக்கு துறை சார்ந்த முக்கிய அதிகாரிகளுக்கும் ஒரு விரிவான சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று பதிலளித்து இருந்தோம் அதற்கு எந்தவித பதிலும் மத்திய அரசிடம் இருந்து திரும்பி வராததால் நாங்கள் கலந்து கொள்ளவில்லை என்றார். மேலும், குலக்கல்வி முறையை திணிக்க பார்க்கிறார்களே என்ற அச்சம் இருக்கிறது.10 மாணவிக்கு 1ஆசிரியர் வீதம் ஒதுக்கி ஆன்லைன் வகுப்புகள் முறைப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.மேலும் மாணவர்களை தொலைபேசி மூலம் நேரடியாகத் தொடர்புகொண்டு அவர்களை கல்வி கற்பதற்கான வழிகாட்டுதலை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறப்பட்டுள்ளது.மத்தியில் ஆளுபவர்கள் யார் எதை படிக்க வேண்டும் என்று தீர்மானிப்பது வளர்ந்த நாடுகளில் கூட இந்த முறை இல்லை.அதேபோல் ஐந்தாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது கொண்டு வர வேண்டும் என்ற மத்திய அரசினுடைய இந்த கல்விக் கொள்கையில் நாங்கள் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறோம். ஏனென்றால் குழந்தைகளின் மனநிலையை பொருத்தும் அவர்களுக்கு மேலும், அழுத்தம் கொடுக்க விரும்பாமல் இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறி வருகிறோம்.நாங்கள் அனுப்பிய மின்னஞ்சல் களுக்கு மத்தியில் இருந்து பதில் திரும்பப் பெறவில்லை என்றால் நாங்கள் முதலமைச்சர் ரோடு தொடர்புகொண்டு அவரோடு ஆலோசனை செய்து மீண்டும் அதை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என்று தெரிவித்தார்.கல்வி தொலைக்காட்சியை இன்னும் சற்றுக் கூடுதலாக மேம்படுத்தி புதிய முனைப்போடு மாணவர்கள் அதை ஆர்வமுடன் கவனித்து படிக்க உறுதுணையாக தொலைக்காட்சி மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம்.12ஆம் வகுப்புக்கான தேர்வை நாங்கள் முறைப்படி திட்டமிட்டு அறிவித்து அதன் பிறகுதான் தேர்வு நடத்தப்படும். நாங்கள் மாணவர்களுக்கு எந்த விதத்திலும் சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பாமல் ரொம்ப சரியாக திட்டமிடப்பட்டு உரிய நேரத்தில் இந்த தேர்வு முறையாக நடத்தப்படும்.2019 ல் திமுக சில திருத்தங்களை மத்திய கல்வி கொள்கையில் கொடுத்திருந்தது அது எல்லாம் முழுமையாக செலுத்திய பின்னரே புதிய கல்விக் கொள்கையை ஏற்பதா இல்லையா என்பதை முடிவு செய்வோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *