முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர்

அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரின் திருஉருவ சிலைக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் திமுக கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் அன்பழகன், வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் (எம்எல்ஏசட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர. இதனை தொடர்ந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலும் உள்ள கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்