திருச்சி சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சியில் குடிநீர் பணியாளராக பணியாற்றி வருபவர் மாற்றுத் திறனாளியான வீரராகவன் வயது 40 இதே பகுதியில் வசிக்கும் அமுமுக மாநில இளைஞர் அணி எம்ஜிஆர் மன்ற பொருளாளர் ஈஞ்சூர் ராமு தனது வீட்டில் கட்டியுள்ள குடிநீர் தொட்டிக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கும் குடிநீர் குறைவாக வழங்குவதால் குடிநீர்த் தொட்டி நிரம்பவில்லை எனக் கூறி பேரூராட்சி குடிநீர் பணியாளர் வீரராகவனை, தனது வீட்டிற்கு வரவழைத்து வீட்டின் உள்ளே வைத்து குச்சியால் கடுமையாக தாக்கியதாக ஈஞ்சூர் ராமு மீது சமயபுரம் காவல் நிலையத்தில் வீர்ராகவன் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமுமுக மாநில இளைஞர் அணி எம்ஜிஆர் மன்ற பொருளாளர் ஈஞ்சூர் ராமு அதிமுக ஆட்சி காலத்தில் திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *