திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பிரிவு மையங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து மருத்துவர்கள், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மருத்துவமனையை விட்டு வெளியே வந்த போது திருச்சியை சேர்ந்த சண்முகபிரியன் வயது(12) என்கிற சிறுவன் தான் சேமித்து வைத்திருந்த 2500 ரூபாய் பணத்தை கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினான். அதனை பெற்றுக்கொண்ட முதல்வர் சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்து அங்கிருந்து சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்