திருச்சியில் போலீசாரின் தடையை மீறிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக வினர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தகாத வார்த்தைகளில் ஆபாசமாக பேசியதாக அதற்கான வீடியோ ஆதாரத்துடன், திமுகவினர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

திருச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலினை ஆபாசமாக பேசிய பிஜேபி நிர்வாகிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுகவினர் திருச்சி அரசு மருத்துவமனை சாலையில் சாலை அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் திருச்சி உறையூர் காவல் நிலையத்தில் திமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் திருச்சி பாஜக மாநகர் மாவட்டம் தலைவர் ராஜசேகரன், தமிழக முதல்வரை ஆபாசமாக பேசிய லட்சுமி நாராயணன் மேலும் கௌதம் காளி உள்ளிட்ட 11 பேர் மீது உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்த போலீசார் திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு பின் 9 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்