திருச்சி புத்தூர் பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் நடன கேளிக்கை விடுதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர் இதனை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது அப்போது பாஜக நிர்வாகி ஒருவர் தமிழக முதல்வரை ஆபாச வார்த்தைகளால் திட்டி கோஷம் எழுப்பினார்.

 இது குறித்து அறிந்த திமுக வட்டச் செயலாளர் புத்தூர் பவுல்ராஜ் தலைமையில் திமுகவினர் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு முதல்வரை ஆபாசமாக பேசிய பாஜக நிர்வாகி மீது சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய வலியுறுத்தி புகார் கொடுத்தனர். பின்னர் அவர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தால் புத்தூர் சாலை பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *