புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட நிறுவனங்களை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அருள் ஜோஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள் வஞ்சிக்கும் விதமாக புது மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ செலவு திரும்பப்பெறுதல் வசதிகளை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி / M.D இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெகநாதன், மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் தங்கவேல் தொட்டியம் வட்ட தலைவர் சுந்தர நாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட செயலாளர் மாரிமுத்து தீர்மானம் வாசிக்க மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் நன்றி உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *