ஆசிரியர் தின கொண்டாட்டமாக ரோட்டரி கிளப் ஆப் ஸ்ரீரங்கம் சார்பில் மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கி சமூக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு துரோணாச்சாரியா விருது வழங்கும் விழா திருச்சி ஸ்ரீரங்கம் ராயர் தோப்பு பகுதியில் உள்ள ரோட்டரி கிளப் ஆப் ஸ்ரீரங்கம் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஆலோசகர் ரெங்கநாதன் வரவேற்புரையாற்றினார்.

ரோட்டரி செயலாளர் சேஷாத்திரி, பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு ரோட்டரி கிளப் ஆப் ஸ்ரீரங்கம் தலைவர் சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீரங்கம் எஜுகேஷனல் சொசைட்டி செயலாளர் கஸ்தூரிரங்கன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து சிறந்த ஆசிரியர்களான ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஸ்ரீநிவாஸன், ஸ்ரீரங்கம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி வித்யாலயா பள்ளி ஆசிரியர் பாலாஜி மற்றும் ஸ்ரீரங்கம் அரங்கநாயகி ஆரம்ப பள்ளி ஆசிரியர் சந்திரசேகரன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். விழாவின் இறுதியாக செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்