திருச்சியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஸ்ரீரங்கம் தாலுகா, மணிகண்டம் ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட மேல பாகனூர் பகுதியில் உள்ள பெரியகுளத்தில் தண்ணீர் நிரம்பி அருகிலுள்ள சம்பா சாகுபடிக்காக பயிரிடப்பட்ட வயல்களில் மழைநீர் குளம்போல் தேங்கி காணப்படுகிறது. மேலும் பெரியகுளத்தில் நிரம்பி தண்ணீர் கோரை ஆற்றில் சென்று கலக்கிறது.

மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்.

மேலும் பெரியகுளத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் அப்பகுதியை சுற்றியுள்ள வீடுகளை சூழ்ந்து உள்ளது. தற்போதுவரை தண்ணீர் வடியாததால் விஷப்பூச்சிகள், பாம்புகள் ஆகியவை வீடுகளில் வந்து தஞ்சம் அடைவதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த கனமழை காரணமாக அங்கு உள்ள பிரதான சாலைகள் தெருக்கள் ஆகியவை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.‌ உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்