திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வா உ சி நகர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவரின் மனைவி மற்றும் அவருடைய இரண்டு மகள்கள் ஒரு மகன்ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் நந்தகுமாரின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மகன் விக்னேஷ் ஆகிய 4 பேரையும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் அதில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஸ்வரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் நந்தகுமாரின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.அதில் நந்தகுமார் எப்போதும் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். வீட்டின் அன்றாட தேவைகளுக்கு கூட போதுமான அளவில் வருமானம் இல்லாமல் தொடர்ந்து வறுமையை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது மேலும் நந்தகுமார் தற்போது வீட்டில் இல்லாத நிலையில் அவருடைய மனைவி மற்றும் இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்பட 4 பேரும் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.விக்னேஸ்வரன் இறந்துள்ள நிலையில் விக்னேஸ்வரனின் தாய் மற்றும் இரண்டு அக்காக்களும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *