நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய துறையின் கீழ் திருச்சி,புதுக்கோட்டை, அரியலூர்,பெரம்பலூர், தஞ்சை,நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநகராட்சிகள்,நகராட்சிகள்,

பேரூராட்சிகளின் வளர்ச்சி பணிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தில் தற்போதைய வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கலையரங்கத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.இதில் தமிழக நகர வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு,தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், தமிழக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன்,அரசு தலைமை கொரொடா கோவை செழியன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள்

  1. கலந்து கொண்டு வருகின்றனர்.இக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன் ஸ்டாலின் குமார் பழனிஆண்டி இனிகோ இருதயராஜ் காடுவெட்டி தியாகராஜன் கதிரவன் அப்துல் சமத் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *