தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் கடந்து ஒராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் பயன் பெற்ற விவசாயிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி மூலம் இன்று கலந்துரையாடினார்.

அந்த வகையில் திருச்சி காஜா நகர், மன்னார்பும் விஎஸ்எம் ஹாலில் நடந்த காணொலி காட்சியில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் அருள்மொழி, திருச்சி மாநகர மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, திருச்சி மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் வீரமுத்து, செயற்பொறியாளர் முத்துராமன்,பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

 இதேபோல் திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் சமயபுரம், லால்குடி, மணப்பாறை, முசிறி, துறையூர் உள்ளிட்ட 7 கோட்டங்களில் 3015 விவசாயிகள் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *