திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி சார்பில் “என் குப்பை எனது பொறுப்பு” என் மாநகராட்சி, எனது சுகாதாரம், என் பெருமை” என்னும் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தண்ணீர் அமைப்பு செயல்தலைவர் நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர், கலைக் காவிரி கல்லூரி உதவிப் பேராசிரியர் சதீஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக மாநகராட்சி சார்பாக வழங்கப்பட்ட “என் குப்பை எனது பொறுப்பு” உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றனர். இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பு நிர்வாகக்குழு ஆர்.கே.ராஜா, உயர்நிலைப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் வினோதினி, சந்திராதேவி, நர்மதா, மகேஸ்வரி. மோட்சராணி, அருணா, ரீனா,ராணி விக்டோரியா, மரினா தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை தனலெட்சுமி , உள்ளிட்ட இருபால் ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர். இறுதியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *