தமிழ்நாடு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என.நேரு ரூபாய் 23.35 லட்சம் மதிப்பீட்டில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் தாக்கர் ரோடு பகுதியில் 10 ஆவது வார்டு வள்ளுவர் தெரு மற்றும் செல்வ முத்து மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணற்றுடன் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியைகளையும், பஞ்சவர்ணசாமி கோயில் தெருவில் அமைக்கப்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக திறந்து வைத்தார்கள்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே என் நேரு :-

 

பாதாள சாக்கடை திட்டம் விரிவு படுத்தப்பட்டு பகுதிகளில் போடுவதற்கு மறுபடியும் அதனை எடுக்க தான் செய்வார்கள்.பொதுவாக அனைவருக்கும் குடிதண்ணீர் கொடுக்கவும் பாதாள சாக்கடை அமைக்கும் பணியில் பொதுமக்களுக்கு சில அசெளகரியம் ஏற்படத்தான் செய்யும் ஆனால் நீண்ட கால தீர்வுக்கு அதுதான் வழி ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.காலையில் கூட விசாரித்தேன் கைச்சின்னத்திற்கு வாக்களிக்க கூடிய மக்கள் வந்து வாக்கு சீட்டு வாங்கிச் செல்வதை .பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் கைச்சின்னம் வெற்றி பெறும் என நம்பிக்கை இருக்கிறது நிச்சயமாக வெற்றி பெறும்.காவேரி பால பணிகள் முடிவடைந்து தார் போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது 1 முதல் 3 தேதிக்குள் கண்டிப்பாக திறந்து விடப்படும். வாக்காளர்களுக்கு வைக்கப்படும் மை அழிந்து விடுகிறது என அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர் என்ற கேள்விக்குஅதிமுகவினர் சொல்வது ஒரு கணக்கா? வாக்காளருக்கு வைக்கக்கூடிய மை எப்படி அழியும். அவர்கள் தோல்வி பயத்தில் சொல்கிறார்கள் அதிமுக டெபாசிட் இழக்கும் என தமிழ்நாடு முதல்வர் தேர்தல் பரப்புரையில் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு அப்படிதான் உள்ளது அங்கு இருக்கும் நிலவரம்,

 இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் திருச்சி மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன், நகர பொறியாளர் சிவபாதம்,மத்திய மாவட்ட பொறுப்பாளர் பிரமுகர் வைரமணி, மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்