திருச்சி மாநகர ஊர்காவல்படையில் கடந்த 2011 -ம் ஆண்டு முதல் ஊர்காவல்படையில் பணிபுரிந்து வந்தவர் வெங்கடேஷ் இவருக்கு மஞ்சள் காமாலை நோய் தொற்று ஏற்பட்டு ( சிறுநீரக பாதிப்பு ) திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 09.01.2022 – ஆம்தேதி இறந்துவிட்டார் .

அவரது குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு உதவும் வகையில் திருச்சி மாநகர ஊர்காவல்படை ஆளிநர்கள் திரட்டிய நிதி ரூ .70,000/- தொகையை இறந்த வெங்கடேஷின் மனைவி சின்னம்மாளிடம் இன்று காலை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வழங்கினார் . அருகில் காவல் உதவி ஆணையர் , திருச்சி மாநகர ஆயுதப்படை , ஊர்காவல்படை வட்டார தளபதி , துணை வட்டார தளபதி மற்றும் நிறும தலைவர் ஆகியோர் உடனிருந்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *