அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்:-

எம்ஜிஆர் இருந்த காலத்தில் அவர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் நான் அவருடன் பயணித்துள்ளேன். கட்சி தலைவர்களை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்பியவர் எம்ஜிஆர். அந்த வகையில் தொண்டர்கள் தேர்ந்தெடுக்கும் நபர் ஒற்றைத் தலைமையேற்கட்டும்.

ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் மட்டுமேதான் அதிமுகவா? எம்.ஜி.ஆரின் உயில்படி தொண்டர்கள் மட்டுமே தலைவரை தேர்ந்தெடுக்க முடியும்.

அதிமுக தொண்டர்களின் கட்சி. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உயிரோடிருந்தால், தற்போதைய அதிமுகவின் நிலையை கண்டு கண்ணீர் வடிப்பர். இரட்டைத் தலைமை வேண்டுமென தீர்மானம் போட்டவர்களே, இப்போது ஒற்றைத் தலைமை வேண்டும் என்கின்றனர். எம்.ஜி.ஆர் எழுதிய உயில் நீதிபதி ஹரி பரந்தாமனிடம் உள்ளது. அதை வைத்து உச்சநீதிமன்றம் வரை செல்வேன். இன்றைய தேதியில் அதிமுகவில் எவருக்கும் பொறுப்பில்லை. அனைவரும் தொண்டர்கள்தான் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *