தமிழக ஆசிரியர் கூட்டணி இயக்க எழுச்சி நாள் விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளரிடம் திண்டுக்கல் ஐ.லியோனி பேசுகையில்..

எத்தனையோ தலைவர்கள் பேனாக்களை பயன்படுத்தி இருக்கிறார்கள், ஆனால் அந்த தலைவருடைய பேனாக்கள் சில சமயங்களில் மக்கள் விரோத கருத்துகளுக்காக கையெழுத்து போட்டு இருக்கிறது. சில பேனாக்கள் மக்களுக்கு எதிரான சிந்தனைகளை எழுதி இருக்கிறது. ஆனால் என்றைய தினம் இந்த பேனாவால் எழுதத் தொடங்கினாரோ அன்று முதல் தமிழ் மக்களுக்காகவும், தமிழின் வளர்ச்சிக்காகவும், உண்மையான அறிவியல் பூர்வமான சிந்தனை பகுத்தறிவு தன்மானம் இவைகளுக்காக எழுதப்பட்ட ஒரே பேனா முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பேனா மட்டுமே. அதனால் அந்த சின்னம் கடலில் நிறுவப்படுவது உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழர்களுக்கு தமிழ் உணர்வை ஏற்படுத்தக்கூடிய மிகப்பெரிய சின்னமாக அமையும். ஏற்கனவே பல நாடுகளில் பல அரசியல் கட்சிகளுக்காக, சிந்தனைகளுக்காக நினைவுச் சின்னங்கள் கடலில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதுபோல இந்த தமிழகர்களுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்த, தன் பேனா முனையால் மிகப்பெரிய வரலாற்றை உருவாக்கி காட்டிய டாக்டர் கலைஞர் அவர் எழுதிய திரைப்பட வசனங்கள், திரைப்படப் பாடல்கள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்த ஒரே தலைவர் வேற எந்த தலைவரும் இல்லை.

அரசியலிலும், இலக்கியத்திலும், சிந்தனைகளிலும் ஒரே நிலையில் இருந்து கடைசி வரை வாழ்ந்து காட்டிய அந்த தலைவருக்கு கடலிலே பேனா சின்னம் நிறுவுவது வருங்கால சமுதாயத்திற்கு தமிழ் வாழ்வதற்கான மிகப்பெரிய வரலாற்றுச் சின்னமாக அது அமையும். எப்படி கரிகாலன் கல்லணையைக் கட்டி தமிழரின் பெருமையை நிலைநாட்டினாரோ அந்த கல்லணைக்கு நிகராக இந்த பேனா சின்னம் இருக்கும். எனவே இது ஒட்டுமொத்த தமிழர்களுடைய தன்மான சின்னமாக அமைய வேண்டும் அது அமைவதை எந்த தமிழனும் முழுமையாக ஏற்றுக் கொள்வான். தற்போது இதனை விமர்சிப்பவர்கள் ஏதோ சடங்கிற்காக பேசுகிறார்களே தவிர கலைஞரின் பேனா எழுத்தில் மிகப்பெரிய ஆர்வமும் ஈடுபாடும் உள்ளவர்கள் தான் அரசியலுக்காக பேசி கொண்டிருக்கிறார்கள். எனவே பேனாச்சின்னம் என்பது தமிழர்களின் தன்மான சின்னம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *