திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 13 ம் ஆண்டு விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கேர் கல்வி குழுமம் தலைமை நிர்வாக அதிகாரி பிரதிவ் சந்த் விழாவிற்கு தலைமை தாங்கினர். இந்த ஆண்டு விழாவில் ஹரியானா ஸ்டீல் ரைடர்ஸ் & புரோ கபடி லீக் இந்திய கபடி வீரர், பிரபஞ்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அதனைத் தொடர்ந்து ஆண்டு விழா கொடியேற்றி விளையாட்டு போட்டிகளை துவங்கி வைத்தார். விளையாட்டு வீரர்களின் வண்ணமிகு அணிவகுப்பை கண்டு மகிழ்ந்தார். அதை தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் உறுதி மொழி வாசித்தனர். ஒலிம்பிக் ஜோதி ஏற்றி விளையாட்டு போட்டிகள் துவங்கின.

சிறப்புவிருந்தினர் பேசுகையில் “பெற்றோர்கள் மாணவர்களை விளையாட்டு போட்டிகளில் பங்குபெற ஊக்குவிக்க வேண்டும். திறமையான மாணவர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்று இந்திய அணிக்கு பெருமை சேர்க்க வேண்டும். மேலும் மாணவர்கள் விட முயற்சியுடன் செயல்பட வேண்டும்” என்றார். நிரைவாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

நிறைவாக கேர் இன்ஜினியரிங் காலேஜ் குழுமத்தின் முதல்வர் Dr.சாந்தி நன்றியுரை ஆற்றினார். மேலும் மாணவ மாணவிகளின் விளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்றது இதில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *