தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய செவிலியர் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய செவிலியர் கூட்டமைப்பு இணைந்து ஒருநாள் விடுப்பு எடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் காயத்ரி தேவி தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் விமலாதேவி செயல் தலைவர் கோமதி துணைத் தலைவர் வசந்தா பொருளாளர் சந்தான லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவன ஈர்ப்பு உரையை மாநிலத் தலைவர் மீனாட்சி வழங்கினார்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளாக;- அரசாணை எண் ண் 288ஐ ரத்து செய்யவும் அரசாணை எண் 392ஐ திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய செவிலியர் நலச் சங்கம் மற்றும் கூட்டமைப்பை சேர்ந்த மாநில மாவட்ட நிர்வாகிகள் ஒரு நாள் விடுப்பு எடுத்து சீருடை அணிந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *