தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையமும் பெண்களுக்கான தேசிய ஆணையமும் இணைந்து நடத்திய ‘சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள்’ என்ற தலைப்பில் திருச்சி காவேரி மகளிர் கல்லூரி கலையரங்கில் இன்று துவங்கியது. இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி வரவேற்புரையாற்றினார். திருச்சி மாநகராட்சி காவல்துறை ஆணையர் சத்தியபிரியா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அதில் மாணவிகளுடன் கலந்துரையாடல் செய்வது மிகவும் மகிழ்ச்சி. நாங்களும் உங்களை போல இருந்து தான் வந்துள்ளோம். இன்றைய காலகட்டத்தில் சமூக வலையதலங்கள் இல்லாமல் யாராலையும் இருக்க முடியாது. அதே சமயம் நல்ல கருத்துகளை மட்டும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த பிரசானையாக இருந்தாலும் அதில் இருந்து வெளியே வருவது உங்கள் கையில் இருக்கு. பெண்கள் என்றாலே பல பிரச்சனைகள் வரும். Facebook, Instagram உள்ளிட சமூக வலையதலங்களில் பல்வேறு கட்டுபாடுகள் இருக்கு ஆகையால் உங்கள் தனிபட்ட கணக்குகளை அதற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டால், பல பிரச்சனைகளில் இருந்து மீண்டுவரலாம்.

தமிழ்நாடு அரசு பெண்கள் பாதுகாப்புக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எந்த பிரசனையாக இருந்தாலும் நாம் அதை கண்டுகொள்ளாமல் இருக்க கூடாது, அதை நாம் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும், ஏன் என்றால் அப்போது தான் அதில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியும். ஆகையால் அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பெண்கள் முன்வந்து புகார் தெரிவித்தால் தான் காவல்துறையால் நடவடிக்கைகள் எடுக்கமுடியும். ஒரு பிரச்சினை வந்தால் அதை எப்படி தீர்க்க முடியும் என்பதை முன் கூட்டியே யோசித்து தீர்மானிக்க வேண்டும். ஆகையால் பெண்கள் அனைவரும் பாதுக்காப்பு, முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு ஆகியவற்றை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்.

இதில் பெண்களுக்கான சட்ட உதவி மையத்தின் தலைவர் வழக்கறிஞர் நிர்மலாராணி, காவேரி மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் சுஜாதா ஆகியோர் சிறப்புரையாற்றினர். முக்கிய உரையாக தேசிய இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி சபையின் இயக்குனர் டாக்டர். காளிராஜ் பெண்களுக்கான வளர்ச்சி மற்றும் திட்டமிடல் மையத்தின் இயக்குனர் சீதாலெட்சுமி மற்றும் தேசிய இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி சபையின் உறுப்பினர் ராணி ஆகியோர் கருத்துரை வழங்கினர். மேலும் அதனைத் தொடர்ந்து கலைநிகழ்வுகள் நடைபெற்றன. திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா நன்றியுரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *