பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் திருவுருவ சிலைக்கு அனைத்து கட்சியை சேர்ந்த தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பாக முன்னாள் எம்பி ரத்தினவேல் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர மாவட்ட பொருளாளர் ராஜா நசீர் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *