திருச்சி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையம் அருகில் இன்று தொடங்கியது. இந்த விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக வாகனங்களில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் “அன்னைத் தமிழே ஆட்சி மொழி” என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த தமிழ் ஆட்சி மொழி சட்டவார விழிப்புணர்வு பேரணியானது திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் துவங்கி ராஜா பூங்கா வழியாக சென்று மேலரன் சாலை, மெயின் காட்கேட் வழியாக திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் “அன்னைத் தமிழே ஆட்சி மொழி” என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை பள்ளி கல்லூரி மாணவர்கள் கையில் ஏந்தி பேரணியாக நடந்து சென்றனர் இந்நிகழ்வில் துணை இயக்குனர் இளங்கோ திருச்சி மாவட்ட தமிழ் அமைப்புகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்