தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பூர்வீக தமிழர் கட்சியின் நிறுவனர் பன்னீர்செல்வம் திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் விஜயை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிட இன்று திருச்சி அரியமங்கலம் மண்டல அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம் கூறுகையில்:- நான் வெற்றி பெற்றவுடன் திருச்சியை தமிழகத்தின் தலைநகராக மாற்றுவேன் என உறுதி அளித்தார். இவர் பத்திரிக்கை துறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
